​ கட்டபஞ்சாயத்து செய்பவர்களுக்கு தான் திமுகவில் பதவியா? .

சென்னை மாநகராட்சி மண்டலகுழு தலைவராக இருப்பவர் ராஜா. மதுரவாயல் வடக்கு பகுதி திமுக நிர்வாகியாகவும் இருக்கிறார் இவர் தனியார் கட்டுமான உரிமையாளர்களிடம் அடியாட்களை அனுப்பி மிரட்டி கட்ட பஞ்சாயத்து செய்து வசூல் செய்கிறார் இது சம்பந்தமாக கட்டுமான சங்கத்தின் சார்பாக முதல்வர் தனிப்பிரிவிற்கு புகார் அனுப்பபட்டும், எந்த வித நடவடிக்கையும் எடுக்கபடவில்லை என்கிறார்கள் அதை தாண்டி சமூக ஆர்வலர்களை தாக்கியது, நொளம்பூர் பகுதியில் அரசு 202 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து பத்திரபதிவு செய்தது என இவர் மேல் எகப்பட்ட புகார்கள் வழக்குகள் இருக்கிறது இந்த ராஜா மேல கட்சி ரீதியாக நடவடிக்கை எடுப்பார்கள் என எதிர்பார்த்தால், தற்போது அவருக்கு கட்சியில் முக்கிய பதவி கொடுக்க போகிறார்கள் என்கிறார்கள் திமுகவில் கட்ட பஞ்சாயத்து, ரவுடியிசம் செய்பவர்களுக்கு தான் கட்சியில் பதவியா? என பொது மக்கள் பேச ஆரம்பித்து விட்டார்கள்

^