உக்ரைனில் போரை நிறுத்தி அமைதியை ஏற்படுத்துமாறு ஐநா.வுக்கு உலக சுகாதார அமைப்பு கோரிக்கை

உக்ரைனில் போரை நிறுத்தி அமைதி நடவடிக்கையில் ஈடுபடுமாறு ஐநா.பாதுகாப்பு கவுன்சிலை உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைவர் அதானோம் டெட்ரோஸ், உக்ரைனுக்கு உதவ மனிதாபிமான உதவிகளை ஐநாவுக்கு வழங்குமாறு உலக நாடுகளுக்குக் கோரிக்கை விடுத்துள்ளா

எந்தச் சூழலிலும் அமைதிதான் தீர்வாக முடியும் என்று வலியுறுத்திய அவர் உக்ரைன் பிரச்சினையால் ஆப்கான், சிரியா போன்ற மனிதாபிமான உதவிகள் தேவைப்படும் இதர நாடுகளின் சூழ்நிலைகளை நாம் புறக்கணித்துவிடக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்

^