Posted Date : 14-Apr-2019
Last updated : 14-Apr-2019
திமுக மாவட்ட செயலாளரால் டென்ஷனான பாரிவேந்தர் .
பெரம்பலூர் தொகுதியில் உதயகுரியன் சின்னத்தில் போட்டியிடுபவர் ஐஜேகேவை சேர்ந்த பாரிவேந்தர். இந்த தொகுதியில் 3 சட்டசபை தொகுதிகள் திருச்சியில் வருகிறது. திருச்சி வட்க்கு மாவட்ட செயலாளர் தியாகராஜன் கட்டுபாட்டில் அந்த தொகுதிகள் இருக்கின்றன அதிமுக சார்பாக சிவபதி போட்டியிடுகிறார். தியாகராஜனும், சிவபதியும் உறவினர் என்கிறார்கள் அதனால், தியாகராஜன் மறைமுகமாக சிவபதிக்கு வேலை பார்த்து கொண்டு இருக்கிறார் என்கிற தகவல் பாரிவேந்தருக்கு போய் விட்டது. இது சம்பந்தமாக தனக்கு வேண்டியவர்களிடம் விசாரிக்க சொல்லி இருக்கிறார் உண்மையாக இருந்தால், உடனடியாக தியாகராஜனை பற்றி ஸ்டாலினிடம் புகார் தர இருக்கிறார் அப்படி பாரிவேந்தர் தோற்று போனால், அதற்கு முழுகாரணம் தியாகராஜனாக தான் இருப்பார் என்கிறார்கள்