திருச்சி அமமுக கழகத்திற்கு புதிய மேற்பார்வையாளரை நியமித்த டிடிவி

அமமுக திருச்சி மாவட்ட செயலாளர் பற்றி செய்தி வெளியிட்டு இருந்தோம். அது தினகரன் வரைக்கும் அந்த செய்தி சென்றதால், புதுக்கோட்டை மாவட்ட முன்னாள் மந்திரியின் மகன் ராஜாவை திருச்சியை பார்த்து கொள்ளும் படி அனுப்பி வைத்து இருக்கிறார் டிடிவி அதன் படி ராஜா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்து இருக்கிறது பூத் கமிட்டி நபர்களிடம் ராஜா கேள்விகள் கேட்டு இருக்கிறார். யாருக்கும் சரியான பதில் தெரியாமல் போக, ராஜா டென்ஷனாகி விட்டார் இன்னும் நாளு இருக்கிறது? சரி செய்து விடலாம்? என கேபிள் சீனிவாசன் சமாளிக்க, ராஜா டென்ஷனனில் பல்லை நறநறவென கடித்து இருக்கிறார் . இந்த லட்சணத்தில் வேலை பார்த்தால், எப்படி சாருபாலா வெற்றி பெறுவார்? என்கிற திட்டி விட்டார் என்கிறார்கள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்.

அதிகம் படித்தவை

^