திருச்சி மாவட்டம் சிறுகனூரை அடுத்த திண்ணாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். அவரது மகன் தமிழ்வாணன். அதே பகுதியில் உள்ள பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகிறார். அதே கல்லூரியில் திருச்சி மாவட்டம் கோவண்டாகுறிச்சியைச் சேர்ந்த பெண் ஒருவரும் படித்து வந்தார். இருவரும் சில ஒருவரை ஒருவர் காதலித்து வந்ததாக தெரிகிறது. பொங்கல் நாளில் இருவரும் சென்னை -திருச்சி பைபாஸ் ரோட்டில் உள்ள மலைமாதா கோவில் பகுதியில் பேசிக்கொண்டிருந்தனர். அதன் பின்னர் இருவரும் ஊருக்கு செல்ல இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டனர். மீண்டும் குமளூர் பகுதியில் வாகனத்தை நிறுத்தி விட்டு பேசி கொண்டு இருந்தனர். அப்போது, அவ்வழியாக 2 மோட்டார் சைக்கிள்களில் 4 வந்தனர். இருவரும் பேசிக் கொண்டிருப்பதை கண்ட அவர்கள், அந்த பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முயன்றனர். அதிர்ச்சியடைந்த தமிழ்வாணன், அந்த கும்பலை தட்டிக் கேட்டார். அப்போது, அவர்களில் ஒரு நபர் தான் வைத்திருந்த கத்தியால் தமிழ்வாணனை கத்தியால் குத்தியுள்ளார். அவர் மயங்கி அதே இடத்தில் சரிய... அந்த பெண்ணை 4 பேரும் அருகில் உள்ள காட்டுப்பகுதிக்குச் கடத்திச் சென்றனர். பின்னர் 4 பேரும் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பியோடினர். சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார், பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். கத்திக்குத்துப்பட்ட கல்லூரி மாணவர் தமிழ்வாணன் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக சிறுகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Posted Date : 16-Jan-2019
Last updated : 16-Jan-2019
காதலன் கொலை.. காதலியை கடத்தி 4 பேர் கொண்ட கும்பல் கற்பழிப்பு