Posted Date : 14-Dec-2018
Last updated : 14-Dec-2018
சபாஷ் திருச்சி எஸ்.பி..! . .
. .திருச்சி சமயபுரம் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.பி தனிப்பிரிவு போலீஸ்சாக இருந்தவர் செந்தில் குமார். இவர் அந்த பகுதியில் லாட்டரி, விபச்சாரம் என பல சட்ட விரோதமான செயல்களில் ஈடுபட்டு, மாமூல் வாங்கி கொண்டு இருந்தார் இது பற்றி புகார்கள் எஸ்பி அலுவலகத்திற்கு போய்யும், எந்த நடவடிக்கையும் இல்லாமல் இருந்தது திடீரென எஸ்.பி. ஜியாவுல்ஹக் விசாரணை நடத்தினார். அப்போது தான் புகார்கள் உண்மை என்பது தெரிய வந்தது. செந்தில்குமார் மட்டுமல்ல, எஸ்.ஐ.அகிலன், மகேஷ் , இளங்குமார் என அனைவரும் இந்த செயலில் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்தது அனைவரையும் சமயபுரம் ஸ்டேஷனில் இருந்து தூக்கி அடித்து விட்டார் எஸ்.பி