. .
தமிழக அமைச்சரவை 2 ஆண்டுகளாக மாற்றம் செய்யபடாமல் இருக்கிறது. இதற்கு காரணம், முதல்வர் வரை கடைநிலை அமைச்சர்கள் வரை ஊழல் புகாரில் சிக்கி இருக்கிறார்கள். ஊழல் புகாரின் மீது அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுத்தால், அவர்கள் தங்களுக்கு எதிராக திரும்பி விடுவார்கள் என பயந்து போன முதல்வர். அப்படியே விட்டு விட்டார் ஆனால், நாடாளுமன்ற தேர்தல் வருகிறது. இந்த சமயத்தில் ஊழல் அமைச்சர்களின் அமைச்சர் பதவியை பறித்தால் தான் மக்கள் மத்தியில் பெயர் கிடைக்கும் என மற்ற அமைச்சர்கள் சொல்ல சில அமைச்சர்களை மாற்றம் செய்ய இருக்கிறார் முதல்வர் அதில் விஜயபாஸ்கர் பெயர் தான் முதன்மையாக இருக்கிறது சிபிஐ விசாரணை மற்றும் வருமான வரித்துறை ரெய்டுகள் நடந்துள்ளன. ஆதாரங்களுடன் சிக்கி இருக்கிறார் விஜயபாஸ்கர் அதனால் அவரை அமைச்சர் பதவியில் இருந்து கல்தா கொடுத்து விடலாம் என திட்டமிட்டு இருக்கிறார் முதல்வர் எடப்பாடி அப்படி நடந்தால் கட்சிகுள் பிரச்சனை எழும் என எதிர்பார்த்து கொண்டு இருக்கிறார்கள்.