Posted Date : 10-Nov-2018
Last updated : 21-Nov-2018
பா.ஜனதாவுக்கு எதிராக புதிய கூட்டணி சென்னையில் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
நாடாளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் தேர்தல் நடைபெற உள்ளது.இந்த தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதற்கான உத்திகளை ஆளும் பாரதீய ஜனதா இப்போதே வகுத்து வருகிறது.அதே சமயம், பணமதிப்பு நீக்க நடவடிக்கை, ஜி.எஸ்.டி. வரி, பெட்ரோல்-டீசல் விலை உயர்வு போன்றவற்றால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தியை சாதகமாக பயன்படுத்தி தேர்தலில் பாரதீய ஜனதாவை வீழ்த்திவிட வேண்டும் என்பதில் எதிர்க்கட்சிகள் மிகவும் தீவிரமாக உள்ளன. இது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர்கள் அவ்வப்போது சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.