மாத ராசி பலன்

சிம்மம்

மன்மத வருட ராசிபலன்கள் - 14.04.2015 முதல் 13.04.2016 வரை :


மகம், பூரம், உத்ரம் 1-ம் பாதம் வரை
(பெயரின் முதல் எழுத்துக்கள்: ம, மி, மு, மெ, மோ, ட, டி, டு, டே உள்ளவர்களுக்கும்)


வியாழன் பார்வையால் வெற்றிக்கனியை எட்டிப்பிடிப்பீர்கள்!

லட்சியம் நிறைவேறும் வரை இரவு பகலாகப் பாடுபடும் சிம்ம ராசி நேயர்களே!

'ஜய' வருடம் முடிந்து 'மன்மத' வருடம் தொடங்கப் போகின்றது. அர்த்தாஷ்டமச் சனியின் ஆதிக்கத்தோடும் விரய வியாழனின் சஞ்சாரத்தோடும் தொடங்கும் இந்தப் புத்தாண்டில் நினைத்ததெல்லாம் நிறைவேறுமா? நிகழ்காலத்தில் நல்ல மாற்றங்கள் வந்து சேருமா?, சென்ற ஆண்டில் ஏற்பட்ட சிக்கல்கள் எல்லாம் விலகுமா? என்றெல்லாம் உங்கள் மனதில் எண்ணங்கள் மலர்ந்து கொண்டே இருக்கும்.

பிறருக்கு உதவி செய்ய வேண்டுமென்ற எண்ணம் பிறக்கும் பொழுதே உங்களுக்கு வந்திருக்கும். கம்பீரமாகப் பேசிக் காரியங்களை சாதித்துக் கொள்ளும் உங்களுக்கு சனி மற்றும் ராகு-கேதுக்களின் ஆதிக்கம் தக்க விதத்தில் சுய ஜாதகத்தில் இருந்தால் சிக்கல்கள் ஏதும் வராது. செயல்பாடுகளில் வெற்றி கிடைக்கும். செல்வ நிலை உயரும். மக்கள் போற்றும் விதத்தில் மாபெரும் வாழ்க்கை அமையும். தனலாபாதிபதியான புதன் தகுந்த பலம் பெற்றிருந்தால் பண மழையிலும் நனைய வாய்ப்பு உண்டு. பல நாடுகளிலும் உங்கள் புகழ் பரவ வாய்ப்பு ஏற்படும்.

சந்தோஷம் தரும் சனி வக்ரம்!

ஆண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சூரியன் உச்சம் பெற்று யோககாரகன் செவ்வாயுடன் தனலாபாதிபதி புதனுடனும் இணைந்து சஞ்சரிக்கிறார். எனவே தனவரவு தாராளமாக வந்து சேரும். தைரியத்தோடு செய்யும் காரியங்களில் வெற்றி கிடைக்கும். மனப்பயம் அகலும்.

வருடத் தொடக்கத்தில் குரு வக்ரம் பெற்று, இரண்டு நாட்களிலேயே குரு வக்ர நிவர்த்தியும் ஆகிவிடுகிறார். அதன் பார்வை 4, 6, 8 ஆகிய மூன்று இடங்களிலும் பதிகிறது அல்லவா? எனவே, எதிர்பார்த்ததை விட இனிய மாற்றங்கள் வந்து சேரப்போகின்றது.

சனியின் சஞ்சாரமும் வக்ர இயக்கத்திலேயே இருக்கிறது. ஆண்டு முழுவதும் வக்ரமடைவதும், வக்ர நிவர்த்தியாவதுமாகவே இருக்கிறது. குறிப்பாக அர்த்தாஷ்டமச் சனி வக்ரம் பெறும் பொழுதெல்லாம் அதிர்ஷ்ட வாய்ப்புகள் அரங்கேறும். துன்பங்கள் தூளாகும். ஆரோக்கியப் பாதிப்பிலிருந்து நல்ல உடல் நலம் பெறுவீர்கள்.

அதே சமயத்தில் சப்தமாதிபதியாகவும் சனி விளங்குகிறார். எனவே குடும்ப பிரச்சினைகள் ஒவ்வொன்றாக தலைதூக்கலாம்.

மேலும் சுக்ரன் பலம் பெற்று சொந்த வீட்டில் சஞ்சரிப்பது யோகம் தான். அதிர்ஷ்ட தேவதையின் அருளுக்கு நீங்கள் பாத்திரமாக விளங்குவீர்கள். தங்கம், வெள்ளி தடையின்றி வாங்குவீர்கள். விலை உயர்ந்த மின்சாதனப் பொருட்கள் வாங்குவது முதல் வீடுகட்டுவது வரை படிப்படியாக நடைபெற, உலாவரும் கிரகங்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கேது 8-ல் இருக்கும் வரை கொஞ்சம் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. இடர்பாடுகளையும், இன்னல்களையும் சந்திக்காமல் இருக்க வழிபிறக் கும். தடைக்கற்களை படிக்கற்களாக மாற்ற உதவுவது நமது யோசனையும், தெய்வத்தின் பூசனையும் தான்.

குரு பார்வை என்ன செய்யும்?

நவக்கிரகங்களின் நல்ல கிரகமான குரு இருக்கும் இடத்தைக் காட்டிலும் பார்க்கும் இடத்திற்குத்தான் பலம் அதிகம். உங்கள் ராசியை பொறுத்தவரை குரு பகவான் பஞ்சம அஷ்டமாதிபதியாவார். பஞ்சமாதிபதி என்றால் நல்ல ஆதிபத்யம் ஆகும். எனவே சொத்துக்களால் வந்த பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும்.

பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். தேக நலனில் தெளிவு பிறக்கும். சாட்சிக் கையெழுத்திட்டு சங்கடத்தில் ஆழ்ந்தவர்கள் ஆச்சரியப்படும் விதத்தில் அதிலிருந்து விடுபடுவர். பார்க்கும் குருவைப் பலப்படுத்த பரிகாரங்களை மேற்கொள்வது நல்லது.

செயல்பாட்டில் வெற்றியைக்கொடுக்குமா, ஜென்ம குரு?

இதுவரை உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தில் விரய ஸ்தானத்தில் சஞ்சரித்து வந்த குரு பகவான் ஆனி மாதம் 20-ம் தேதி முதல் ஜென்ம ராசியில் சஞ்சரிக்கப் போகிறார். இப்பொழுது சிம்மத்தில் சஞ்சரிக்கப் போகும் குரு பகவான் உங்கள் ராசிக்கு 5, 7, 9 ஆகிய இடங்களைப் பார்க்கிறார். எனவே அந்த இடங்கள் புனிதமடைகின்றன.

ஐந்தினை குருதான் பார்த்தால்
அகத்தினில் மகிழ்ச்சி கூடும்!
ஏழினை குருதான் பார்த்தால்
இல்லறம் இனிதாய் வாய்க்கும்!


ஒன்பதை குருதான் பார்த்தால் உன்னத வாழ்க்கை அமையும், என்று ஜோதிட சாஸ்திரம் சொல் கிறது.

எனவே 5-ம் இடத்தைக் குரு பார்ப்பதால் அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் இன்னல்கள் மாறும். வந்த துயரங்கள் வாயிலோடு நிற்கும். சிந்தித்த காரியங்கள் சிந்தித்தபடியே நடை பெறவில்லையே என்ற கவலை அகலும். மந்தனாம் சனியால் வந்த பாதிப்புகள் குருப்பெயர்ச்சியின் விளைவாக மாறும்.

பூர்வீக சொத்து தகராறுகள் அகலும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பிள்ளைகளின் கல்யாணக் கனவுகளை நனவாக்குவீர்கள். கூர்மதி படைத்தவர்கள் உங்கள் கூடவே இருந்து ஜோரான வாழ்க்கை அமைய சில நுணுக்கங் களை சொல்லிக் கொடுப்பர்.

7-ம் இடத்தைப் பார்க்கும் குருவால் இல்லத்தில் சுபகாரியப் பேச்சுக்கள் கைகூடும். இதுவரை தடைப்பட்ட வரன்கள் தானாக வந்து சேரும். வெளிநாட்டு பயணத்தில் இருந்த தாமதங்கள் அகலும்.

பிரிந்தவர்கள் வந்திணைவர். ஒன்பதாமிடத்தைப் பார்க்கும் குருவால் தந்தை வழிப் பிரச்சினைகள் அகலும். பெற்றோர்களின் பிரியம் உங்கள் மீது பதியும். நல்ல எண்ணம் கொண்டவர்களின் தொடர்பால் நலன்களையும், வளங்களையும் வரவழைத்துக் கொள்வீர்கள்.

இடமாற்றப் பிரச்சினைகள் அகலும். தொழிலுக்கு மாற்று இனத்தவர்கள் துணையாக நிற்பர். பகைத்தவரும், நகைத்தவரும் பக்கபலமாக வந்திணைவர். வாகனங்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பழைய வாகனங்களில் பராமரிப்புச் செலவு அதிகரிக்கிறதே என்று புதிய வாகனங்கள் வாங்க திட்டம் தீட்டுவீர்கள். புனிதப் பயணங்கள் அதிகரிக்கும்.

நலம் தரும் ராகு-கேது பெயர்ச்சி!

மார்கழி மாதம் 23-ம் தேதி (8.1.2016) சிம்ம ராசியில் ராகு சஞ்சரிக்கப் போகிறார். அதே நேரத்தில் கும்ப ராசியில் கேது சஞ்சரிக்கப் போகிறார். இந்தப் பெயர்ச்சியின் பொழுது உங்கள் ராசியிலேயே ராகு சஞ்சரிக்கப் போவது அவ்வளவு நல்லதல்ல. சூரியன் வீட்டில் ராகு சஞ்சரிக்கும் பொழுது, கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். சப்தம ஸ்தானத்திலும் கேது சஞ்சரிக்கின்றார்.

சர்ப்ப தோஷத்தின் பிடியில் இருக்கும் கிரக நிலை உங்களுக்கு வந்து சேருகிறது. எனவே, ராகு-கேது பெயர்ச்சியான இரண்டு மாதங்களுக்குள் முறையான சர்ப்ப பிரீதிகளை செய்து கொள்வதன் மூலம் முன்னேற்றத் தடைகளை அகற்றிக் கொள்ள முடியும்.
குடும்பத்திலும் குழப்பங்கள் ஏற்படலாம். மூன்றாம் நபரின் குறுக்கீட்டால் முக்கியப் பிரச்சினைகளுக்கு முடிவுஎடுக்க முடியாமல் திணறுவீர்கள். வளர்ச்சியும், தளர்ச்சியும் மாறி மாறி வரும். சேமிப்புகள் கரையலாம்.

சனியின் சஞ்சார நிலைகள்!

சனி பகவான் வருடத் தொடக்கத்திலேயே வக்ர இயக்கத்தில் தான் இருக்கிறார். 12.6.2015 முதல் துலாம் ராசியில் வக்ரமடைகிறார்.
30.7.2015-ல் வக்ர நிவர்த்தியாகிறார். பிறகு 5.9.2015-ல் விருச்சிக ராசியில் வக்ர நிவர்த்தியடைகிறார். பிறகு 26.3.2016-ல் மீண்டும் விருச்சிக ராசியில் சனி வக்ரமடைகிறார்.

இப்படி இந்த ஆண்டு முழுவதும் சனி வக்ர இயக்கத்தில் இருப்பதும், வக்ர நிவர்த்தியாவதும் மாறி மாறி நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. துலாத்தில் சனி இருக்கும் பொழுது சகோதர ஒற்றுமை பலப்படும். வழக்குகளில் வெற்றி ஏற்படும். உடன்பிறப்புகளால் நல்ல காரியம் இல்லத்தில் நடைபெறும்.

விருச்சிகத்தில் சனி வக்ரமடையும் பொழுது வீடு, இடம் வாங்கும் சூழ் நிலைகள் உருவாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைத்து வசதி வாய்ப்புகளை பெருக்கிக் கொள்வீர்கள். அதே நேரத்தில் சப்தமாதிபதி வக்ரம் பெறுவதால் வாழ்க்கைத் துணையோடு அனுசரித்துச் செல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகும்.
கல்யாண வாய்ப்புகள் கைநழுவிச் செல்லலாம். சனி கவசம் பாடி சனி பகவானை வழிபடுவது நல்லது. ஆதித்தனும், சனியும் அடுத்தடுத்து இருக்கும் ஆலயங்களுக்குச் சென்று வழிபடுவது சிறப்பானதாகும்.

குருவின் வக்ர இயக்கம்!

குரு 20.12.2015-ல் கன்னி ராசியில் அதிசாரம் பெறுகிறார். 7.2.2016-ல் சிம்ம ராசியில் வக்ரம் பெறுகிறார். இதன் விளைவாக பண வரவு திருப்தி தரும். தொழிலில் ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்யும் வாய்ப்பு கிட்டும். குழந்தைகளின் நலன் கருதி எடுத்த முயற்சிகளில் அனுகூலம் ஏற்படும். அவர்களின் அன்னிய தேசப் பயணங்கள் எண்ணியபடி முடிவடையும். குரு வழிபாடு குதூகலம் வழங்கும்.

வருடம் முழுவதும் வசந்தம் வர வழிபாடு!


ராசிநாதன் சூரியனை பலப்படுத்த ஞாயிற்றுக்கிழமை அன்று சூரிய வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். ராகு- கேது பிரீதியும் மனக்கவலையை மாற்றும். சனிக்கிழமை அனுமனுக்கு விளக்கேற்றி வழிபடுவது நல்லது. திசாபுத்திக்கேற்ற தெய்வ வழிபாடு சிறப்பான வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும்.

மங்கையருக்கான மகத்தான பலன்கள்!

சிம்ம ராசியில் பிறந்த பெண்களே, ஆண்டின் தொடக்கத்தில் அடுக்கடுக்காக நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரும். குருச்சந்திர யோகத்தால் குழப்பங்களில் இருந்து விடுபடுவீர்கள். சனியின் வக்ர இயக்கம் சாதகமாக இருப்பதால் வெற்றிச் செய்திகள் வீடு தேடி வரும். குருப் பெயர்ச்சிக்குப் பிறகு விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேருவர். கணவன்-மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும்.

ஆடை, ஆபரண சேர்க்கை அதிகரிக்கும். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி தீட்டிய திட்டங்கள் வெற்றி பெறும். ஆரோக்கியத் தொல்லை அகலும். ராகு-கேது பெயர்ச்சிக்குப் பின்னால் கூடுதல் கவனம் தேவை. உறவினர் பகை உருவாகும். இட மாற்றங்கள், ஊர் மாற்றங்கள் எதிர்பாராத விதமாக வந்து சேரும். நாக சாந்தியும், நலம் தரும் தெய்வ வழிபாடும் தேக நலனையும் சீராக்கும். செல்வ வளமும் பெருகும்.மன்மத வருட ராசிபலன்கள் - 14.04.2015 முதல் 13.04.2016 வரை :


மகம், பூரம், உத்ரம் 1-ம் பாதம் வரை
(பெயரின் முதல் எழுத்துக்கள்: ம, மி, மு, மெ, மோ, ட, டி, டு, டே உள்ளவர்களுக்கும்)


வியாழன் பார்வையால் வெற்றிக்கனியை எட்டிப்பிடிப்பீர்கள்!

லட்சியம் நிறைவேறும் வரை இரவு பகலாகப் பாடுபடும் சிம்ம ராசி நேயர்களே!

'ஜய' வருடம் முடிந்து 'மன்மத' வருடம் தொடங்கப் போகின்றது. அர்த்தாஷ்டமச் சனியின் ஆதிக்கத்தோடும் விரய வியாழனின் சஞ்சாரத்தோடும் தொடங்கும் இந்தப் புத்தாண்டில் நினைத்ததெல்லாம் நிறைவேறுமா? நிகழ்காலத்தில் நல்ல மாற்றங்கள் வந்து சேருமா?, சென்ற ஆண்டில் ஏற்பட்ட சிக்கல்கள் எல்லாம் விலகுமா? என்றெல்லாம் உங்கள் மனதில் எண்ணங்கள் மலர்ந்து கொண்டே இருக்கும்.

பிறருக்கு உதவி செய்ய வேண்டுமென்ற எண்ணம் பிறக்கும் பொழுதே உங்களுக்கு வந்திருக்கும். கம்பீரமாகப் பேசிக் காரியங்களை சாதித்துக் கொள்ளும் உங்களுக்கு சனி மற்றும் ராகு-கேதுக்களின் ஆதிக்கம் தக்க விதத்தில் சுய ஜாதகத்தில் இருந்தால் சிக்கல்கள் ஏதும் வராது. செயல்பாடுகளில் வெற்றி கிடைக்கும். செல்வ நிலை உயரும். மக்கள் போற்றும் விதத்தில் மாபெரும் வாழ்க்கை அமையும். தனலாபாதிபதியான புதன் தகுந்த பலம் பெற்றிருந்தால் பண மழையிலும் நனைய வாய்ப்பு உண்டு. பல நாடுகளிலும் உங்கள் புகழ் பரவ வாய்ப்பு ஏற்படும்.

சந்தோஷம் தரும் சனி வக்ரம்!

ஆண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சூரியன் உச்சம் பெற்று யோககாரகன் செவ்வாயுடன் தனலாபாதிபதி புதனுடனும் இணைந்து சஞ்சரிக்கிறார். எனவே தனவரவு தாராளமாக வந்து சேரும். தைரியத்தோடு செய்யும் காரியங்களில் வெற்றி கிடைக்கும். மனப்பயம் அகலும்.

வருடத் தொடக்கத்தில் குரு வக்ரம் பெற்று, இரண்டு நாட்களிலேயே குரு வக்ர நிவர்த்தியும் ஆகிவிடுகிறார். அதன் பார்வை 4, 6, 8 ஆகிய மூன்று இடங்களிலும் பதிகிறது அல்லவா? எனவே, எதிர்பார்த்ததை விட இனிய மாற்றங்கள் வந்து சேரப்போகின்றது.

சனியின் சஞ்சாரமும் வக்ர இயக்கத்திலேயே இருக்கிறது. ஆண்டு முழுவதும் வக்ரமடைவதும், வக்ர நிவர்த்தியாவதுமாகவே இருக்கிறது. குறிப்பாக அர்த்தாஷ்டமச் சனி வக்ரம் பெறும் பொழுதெல்லாம் அதிர்ஷ்ட வாய்ப்புகள் அரங்கேறும். துன்பங்கள் தூளாகும். ஆரோக்கியப் பாதிப்பிலிருந்து நல்ல உடல் நலம் பெறுவீர்கள்.

அதே சமயத்தில் சப்தமாதிபதியாகவும் சனி விளங்குகிறார். எனவே குடும்ப பிரச்சினைகள் ஒவ்வொன்றாக தலைதூக்கலாம்.

மேலும் சுக்ரன் பலம் பெற்று சொந்த வீட்டில் சஞ்சரிப்பது யோகம் தான். அதிர்ஷ்ட தேவதையின் அருளுக்கு நீங்கள் பாத்திரமாக விளங்குவீர்கள். தங்கம், வெள்ளி தடையின்றி வாங்குவீர்கள். விலை உயர்ந்த மின்சாதனப் பொருட்கள் வாங்குவது முதல் வீடுகட்டுவது வரை படிப்படியாக நடைபெற, உலாவரும் கிரகங்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கேது 8-ல் இருக்கும் வரை கொஞ்சம் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. இடர்பாடுகளையும், இன்னல்களையும் சந்திக்காமல் இருக்க வழிபிறக் கும். தடைக்கற்களை படிக்கற்களாக மாற்ற உதவுவது நமது யோசனையும், தெய்வத்தின் பூசனையும் தான்.

குரு பார்வை என்ன செய்யும்?

நவக்கிரகங்களின் நல்ல கிரகமான குரு இருக்கும் இடத்தைக் காட்டிலும் பார்க்கும் இடத்திற்குத்தான் பலம் அதிகம். உங்கள் ராசியை பொறுத்தவரை குரு பகவான் பஞ்சம அஷ்டமாதிபதியாவார். பஞ்சமாதிபதி என்றால் நல்ல ஆதிபத்யம் ஆகும். எனவே சொத்துக்களால் வந்த பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும்.

பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். தேக நலனில் தெளிவு பிறக்கும். சாட்சிக் கையெழுத்திட்டு சங்கடத்தில் ஆழ்ந்தவர்கள் ஆச்சரியப்படும் விதத்தில் அதிலிருந்து விடுபடுவர். பார்க்கும் குருவைப் பலப்படுத்த பரிகாரங்களை மேற்கொள்வது நல்லது.

செயல்பாட்டில் வெற்றியைக்கொடுக்குமா, ஜென்ம குரு?

இதுவரை உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தில் விரய ஸ்தானத்தில் சஞ்சரித்து வந்த குரு பகவான் ஆனி மாதம் 20-ம் தேதி முதல் ஜென்ம ராசியில் சஞ்சரிக்கப் போகிறார். இப்பொழுது சிம்மத்தில் சஞ்சரிக்கப் போகும் குரு பகவான் உங்கள் ராசிக்கு 5, 7, 9 ஆகிய இடங்களைப் பார்க்கிறார். எனவே அந்த இடங்கள் புனிதமடைகின்றன.

ஐந்தினை குருதான் பார்த்தால்
அகத்தினில் மகிழ்ச்சி கூடும்!
ஏழினை குருதான் பார்த்தால்
இல்லறம் இனிதாய் வாய்க்கும்!


ஒன்பதை குருதான் பார்த்தால் உன்னத வாழ்க்கை அமையும், என்று ஜோதிட சாஸ்திரம் சொல் கிறது.

எனவே 5-ம் இடத்தைக் குரு பார்ப்பதால் அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் இன்னல்கள் மாறும். வந்த துயரங்கள் வாயிலோடு நிற்கும். சிந்தித்த காரியங்கள் சிந்தித்தபடியே நடை பெறவில்லையே என்ற கவலை அகலும். மந்தனாம் சனியால் வந்த பாதிப்புகள் குருப்பெயர்ச்சியின் விளைவாக மாறும்.

பூர்வீக சொத்து தகராறுகள் அகலும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பிள்ளைகளின் கல்யாணக் கனவுகளை நனவாக்குவீர்கள். கூர்மதி படைத்தவர்கள் உங்கள் கூடவே இருந்து ஜோரான வாழ்க்கை அமைய சில நுணுக்கங் களை சொல்லிக் கொடுப்பர்.

7-ம் இடத்தைப் பார்க்கும் குருவால் இல்லத்தில் சுபகாரியப் பேச்சுக்கள் கைகூடும். இதுவரை தடைப்பட்ட வரன்கள் தானாக வந்து சேரும். வெளிநாட்டு பயணத்தில் இருந்த தாமதங்கள் அகலும்.

பிரிந்தவர்கள் வந்திணைவர். ஒன்பதாமிடத்தைப் பார்க்கும் குருவால் தந்தை வழிப் பிரச்சினைகள் அகலும். பெற்றோர்களின் பிரியம் உங்கள் மீது பதியும். நல்ல எண்ணம் கொண்டவர்களின் தொடர்பால் நலன்களையும், வளங்களையும் வரவழைத்துக் கொள்வீர்கள்.

இடமாற்றப் பிரச்சினைகள் அகலும். தொழிலுக்கு மாற்று இனத்தவர்கள் துணையாக நிற்பர். பகைத்தவரும், நகைத்தவரும் பக்கபலமாக வந்திணைவர். வாகனங்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பழைய வாகனங்களில் பராமரிப்புச் செலவு அதிகரிக்கிறதே என்று புதிய வாகனங்கள் வாங்க திட்டம் தீட்டுவீர்கள். புனிதப் பயணங்கள் அதிகரிக்கும்.

நலம் தரும் ராகு-கேது பெயர்ச்சி!

மார்கழி மாதம் 23-ம் தேதி (8.1.2016) சிம்ம ராசியில் ராகு சஞ்சரிக்கப் போகிறார். அதே நேரத்தில் கும்ப ராசியில் கேது சஞ்சரிக்கப் போகிறார். இந்தப் பெயர்ச்சியின் பொழுது உங்கள் ராசியிலேயே ராகு சஞ்சரிக்கப் போவது அவ்வளவு நல்லதல்ல. சூரியன் வீட்டில் ராகு சஞ்சரிக்கும் பொழுது, கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். சப்தம ஸ்தானத்திலும் கேது சஞ்சரிக்கின்றார்.

சர்ப்ப தோஷத்தின் பிடியில் இருக்கும் கிரக நிலை உங்களுக்கு வந்து சேருகிறது. எனவே, ராகு-கேது பெயர்ச்சியான இரண்டு மாதங்களுக்குள் முறையான சர்ப்ப பிரீதிகளை செய்து கொள்வதன் மூலம் முன்னேற்றத் தடைகளை அகற்றிக் கொள்ள முடியும்.
குடும்பத்திலும் குழப்பங்கள் ஏற்படலாம். மூன்றாம் நபரின் குறுக்கீட்டால் முக்கியப் பிரச்சினைகளுக்கு முடிவுஎடுக்க முடியாமல் திணறுவீர்கள். வளர்ச்சியும், தளர்ச்சியும் மாறி மாறி வரும். சேமிப்புகள் கரையலாம்.

சனியின் சஞ்சார நிலைகள்!

சனி பகவான் வருடத் தொடக்கத்திலேயே வக்ர இயக்கத்தில் தான் இருக்கிறார். 12.6.2015 முதல் துலாம் ராசியில் வக்ரமடைகிறார்.
30.7.2015-ல் வக்ர நிவர்த்தியாகிறார். பிறகு 5.9.2015-ல் விருச்சிக ராசியில் வக்ர நிவர்த்தியடைகிறார். பிறகு 26.3.2016-ல் மீண்டும் விருச்சிக ராசியில் சனி வக்ரமடைகிறார்.

இப்படி இந்த ஆண்டு முழுவதும் சனி வக்ர இயக்கத்தில் இருப்பதும், வக்ர நிவர்த்தியாவதும் மாறி மாறி நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. துலாத்தில் சனி இருக்கும் பொழுது சகோதர ஒற்றுமை பலப்படும். வழக்குகளில் வெற்றி ஏற்படும். உடன்பிறப்புகளால் நல்ல காரியம் இல்லத்தில் நடைபெறும்.

விருச்சிகத்தில் சனி வக்ரமடையும் பொழுது வீடு, இடம் வாங்கும் சூழ் நிலைகள் உருவாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைத்து வசதி வாய்ப்புகளை பெருக்கிக் கொள்வீர்கள். அதே நேரத்தில் சப்தமாதிபதி வக்ரம் பெறுவதால் வாழ்க்கைத் துணையோடு அனுசரித்துச் செல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகும்.
கல்யாண வாய்ப்புகள் கைநழுவிச் செல்லலாம். சனி கவசம் பாடி சனி பகவானை வழிபடுவது நல்லது. ஆதித்தனும், சனியும் அடுத்தடுத்து இருக்கும் ஆலயங்களுக்குச் சென்று வழிபடுவது சிறப்பானதாகும்.

குருவின் வக்ர இயக்கம்!

குரு 20.12.2015-ல் கன்னி ராசியில் அதிசாரம் பெறுகிறார். 7.2.2016-ல் சிம்ம ராசியில் வக்ரம் பெறுகிறார். இதன் விளைவாக பண வரவு திருப்தி தரும். தொழிலில் ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்யும் வாய்ப்பு கிட்டும். குழந்தைகளின் நலன் கருதி எடுத்த முயற்சிகளில் அனுகூலம் ஏற்படும். அவர்களின் அன்னிய தேசப் பயணங்கள் எண்ணியபடி முடிவடையும். குரு வழிபாடு குதூகலம் வழங்கும்.

வருடம் முழுவதும் வசந்தம் வர வழிபாடு!


ராசிநாதன் சூரியனை பலப்படுத்த ஞாயிற்றுக்கிழமை அன்று சூரிய வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். ராகு- கேது பிரீதியும் மனக்கவலையை மாற்றும். சனிக்கிழமை அனுமனுக்கு விளக்கேற்றி வழிபடுவது நல்லது. திசாபுத்திக்கேற்ற தெய்வ வழிபாடு சிறப்பான வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும்.

மங்கையருக்கான மகத்தான பலன்கள்!

சிம்ம ராசியில் பிறந்த பெண்களே, ஆண்டின் தொடக்கத்தில் அடுக்கடுக்காக நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரும். குருச்சந்திர யோகத்தால் குழப்பங்களில் இருந்து விடுபடுவீர்கள். சனியின் வக்ர இயக்கம் சாதகமாக இருப்பதால் வெற்றிச் செய்திகள் வீடு தேடி வரும். குருப் பெயர்ச்சிக்குப் பிறகு விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேருவர். கணவன்-மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும்.

ஆடை, ஆபரண சேர்க்கை அதிகரிக்கும். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி தீட்டிய திட்டங்கள் வெற்றி பெறும். ஆரோக்கியத் தொல்லை அகலும். ராகு-கேது பெயர்ச்சிக்குப் பின்னால் கூடுதல் கவனம் தேவை. உறவினர் பகை உருவாகும். இட மாற்றங்கள், ஊர் மாற்றங்கள் எதிர்பாராத விதமாக வந்து சேரும். நாக சாந்தியும், நலம் தரும் தெய்வ வழிபாடும் தேக நலனையும் சீராக்கும். செல்வ வளமும் பெருகும்.மன்மத வருட ராசிபலன்கள் - 14.04.2015 முதல் 13.04.2016 வரை :


மகம், பூரம், உத்ரம் 1-ம் பாதம் வரை
(பெயரின் முதல் எழுத்துக்கள்: ம, மி, மு, மெ, மோ, ட, டி, டு, டே உள்ளவர்களுக்கும்)


வியாழன் பார்வையால் வெற்றிக்கனியை எட்டிப்பிடிப்பீர்கள்!

லட்சியம் நிறைவேறும் வரை இரவு பகலாகப் பாடுபடும் சிம்ம ராசி நேயர்களே!

'ஜய' வருடம் முடிந்து 'மன்மத' வருடம் தொடங்கப் போகின்றது. அர்த்தாஷ்டமச் சனியின் ஆதிக்கத்தோடும் விரய வியாழனின் சஞ்சாரத்தோடும் தொடங்கும் இந்தப் புத்தாண்டில் நினைத்ததெல்லாம் நிறைவேறுமா? நிகழ்காலத்தில் நல்ல மாற்றங்கள் வந்து சேருமா?, சென்ற ஆண்டில் ஏற்பட்ட சிக்கல்கள் எல்லாம் விலகுமா? என்றெல்லாம் உங்கள் மனதில் எண்ணங்கள் மலர்ந்து கொண்டே இருக்கும்.

பிறருக்கு உதவி செய்ய வேண்டுமென்ற எண்ணம் பிறக்கும் பொழுதே உங்களுக்கு வந்திருக்கும். கம்பீரமாகப் பேசிக் காரியங்களை சாதித்துக் கொள்ளும் உங்களுக்கு சனி மற்றும் ராகு-கேதுக்களின் ஆதிக்கம் தக்க விதத்தில் சுய ஜாதகத்தில் இருந்தால் சிக்கல்கள் ஏதும் வராது. செயல்பாடுகளில் வெற்றி கிடைக்கும். செல்வ நிலை உயரும். மக்கள் போற்றும் விதத்தில் மாபெரும் வாழ்க்கை அமையும். தனலாபாதிபதியான புதன் தகுந்த பலம் பெற்றிருந்தால் பண மழையிலும் நனைய வாய்ப்பு உண்டு. பல நாடுகளிலும் உங்கள் புகழ் பரவ வாய்ப்பு ஏற்படும்.

சந்தோஷம் தரும் சனி வக்ரம்!

ஆண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சூரியன் உச்சம் பெற்று யோககாரகன் செவ்வாயுடன் தனலாபாதிபதி புதனுடனும் இணைந்து சஞ்சரிக்கிறார். எனவே தனவரவு தாராளமாக வந்து சேரும். தைரியத்தோடு செய்யும் காரியங்களில் வெற்றி கிடைக்கும். மனப்பயம் அகலும்.

வருடத் தொடக்கத்தில் குரு வக்ரம் பெற்று, இரண்டு நாட்களிலேயே குரு வக்ர நிவர்த்தியும் ஆகிவிடுகிறார். அதன் பார்வை 4, 6, 8 ஆகிய மூன்று இடங்களிலும் பதிகிறது அல்லவா? எனவே, எதிர்பார்த்ததை விட இனிய மாற்றங்கள் வந்து சேரப்போகின்றது.

சனியின் சஞ்சாரமும் வக்ர இயக்கத்திலேயே இருக்கிறது. ஆண்டு முழுவதும் வக்ரமடைவதும், வக்ர நிவர்த்தியாவதுமாகவே இருக்கிறது. குறிப்பாக அர்த்தாஷ்டமச் சனி வக்ரம் பெறும் பொழுதெல்லாம் அதிர்ஷ்ட வாய்ப்புகள் அரங்கேறும். துன்பங்கள் தூளாகும். ஆரோக்கியப் பாதிப்பிலிருந்து நல்ல உடல் நலம் பெறுவீர்கள்.

அதே சமயத்தில் சப்தமாதிபதியாகவும் சனி விளங்குகிறார். எனவே குடும்ப பிரச்சினைகள் ஒவ்வொன்றாக தலைதூக்கலாம்.

மேலும் சுக்ரன் பலம் பெற்று சொந்த வீட்டில் சஞ்சரிப்பது யோகம் தான். அதிர்ஷ்ட தேவதையின் அருளுக்கு நீங்கள் பாத்திரமாக விளங்குவீர்கள். தங்கம், வெள்ளி தடையின்றி வாங்குவீர்கள். விலை உயர்ந்த மின்சாதனப் பொருட்கள் வாங்குவது முதல் வீடுகட்டுவது வரை படிப்படியாக நடைபெற, உலாவரும் கிரகங்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கேது 8-ல் இருக்கும் வரை கொஞ்சம் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. இடர்பாடுகளையும், இன்னல்களையும் சந்திக்காமல் இருக்க வழிபிறக் கும். தடைக்கற்களை படிக்கற்களாக மாற்ற உதவுவது நமது யோசனையும், தெய்வத்தின் பூசனையும் தான்.

குரு பார்வை என்ன செய்யும்?

நவக்கிரகங்களின் நல்ல கிரகமான குரு இருக்கும் இடத்தைக் காட்டிலும் பார்க்கும் இடத்திற்குத்தான் பலம் அதிகம். உங்கள் ராசியை பொறுத்தவரை குரு பகவான் பஞ்சம அஷ்டமாதிபதியாவார். பஞ்சமாதிபதி என்றால் நல்ல ஆதிபத்யம் ஆகும். எனவே சொத்துக்களால் வந்த பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும்.

பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். தேக நலனில் தெளிவு பிறக்கும். சாட்சிக் கையெழுத்திட்டு சங்கடத்தில் ஆழ்ந்தவர்கள் ஆச்சரியப்படும் விதத்தில் அதிலிருந்து விடுபடுவர். பார்க்கும் குருவைப் பலப்படுத்த பரிகாரங்களை மேற்கொள்வது நல்லது.

செயல்பாட்டில் வெற்றியைக்கொடுக்குமா, ஜென்ம குரு?

இதுவரை உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தில் விரய ஸ்தானத்தில் சஞ்சரித்து வந்த குரு பகவான் ஆனி மாதம் 20-ம் தேதி முதல் ஜென்ம ராசியில் சஞ்சரிக்கப் போகிறார். இப்பொழுது சிம்மத்தில் சஞ்சரிக்கப் போகும் குரு பகவான் உங்கள் ராசிக்கு 5, 7, 9 ஆகிய இடங்களைப் பார்க்கிறார். எனவே அந்த இடங்கள் புனிதமடைகின்றன.

ஐந்தினை குருதான் பார்த்தால்
அகத்தினில் மகிழ்ச்சி கூடும்!
ஏழினை குருதான் பார்த்தால்
இல்லறம் இனிதாய் வாய்க்கும்!


ஒன்பதை குருதான் பார்த்தால் உன்னத வாழ்க்கை அமையும், என்று ஜோதிட சாஸ்திரம் சொல் கிறது.

எனவே 5-ம் இடத்தைக் குரு பார்ப்பதால் அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் இன்னல்கள் மாறும். வந்த துயரங்கள் வாயிலோடு நிற்கும். சிந்தித்த காரியங்கள் சிந்தித்தபடியே நடை பெறவில்லையே என்ற கவலை அகலும். மந்தனாம் சனியால் வந்த பாதிப்புகள் குருப்பெயர்ச்சியின் விளைவாக மாறும்.

பூர்வீக சொத்து தகராறுகள் அகலும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பிள்ளைகளின் கல்யாணக் கனவுகளை நனவாக்குவீர்கள். கூர்மதி படைத்தவர்கள் உங்கள் கூடவே இருந்து ஜோரான வாழ்க்கை அமைய சில நுணுக்கங் களை சொல்லிக் கொடுப்பர்.

7-ம் இடத்தைப் பார்க்கும் குருவால் இல்லத்தில் சுபகாரியப் பேச்சுக்கள் கைகூடும். இதுவரை தடைப்பட்ட வரன்கள் தானாக வந்து சேரும். வெளிநாட்டு பயணத்தில் இருந்த தாமதங்கள் அகலும்.

பிரிந்தவர்கள் வந்திணைவர். ஒன்பதாமிடத்தைப் பார்க்கும் குருவால் தந்தை வழிப் பிரச்சினைகள் அகலும். பெற்றோர்களின் பிரியம் உங்கள் மீது பதியும். நல்ல எண்ணம் கொண்டவர்களின் தொடர்பால் நலன்களையும், வளங்களையும் வரவழைத்துக் கொள்வீர்கள்.

இடமாற்றப் பிரச்சினைகள் அகலும். தொழிலுக்கு மாற்று இனத்தவர்கள் துணையாக நிற்பர். பகைத்தவரும், நகைத்தவரும் பக்கபலமாக வந்திணைவர். வாகனங்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பழைய வாகனங்களில் பராமரிப்புச் செலவு அதிகரிக்கிறதே என்று புதிய வாகனங்கள் வாங்க திட்டம் தீட்டுவீர்கள். புனிதப் பயணங்கள் அதிகரிக்கும்.

நலம் தரும் ராகு-கேது பெயர்ச்சி!

மார்கழி மாதம் 23-ம் தேதி (8.1.2016) சிம்ம ராசியில் ராகு சஞ்சரிக்கப் போகிறார். அதே நேரத்தில் கும்ப ராசியில் கேது சஞ்சரிக்கப் போகிறார். இந்தப் பெயர்ச்சியின் பொழுது உங்கள் ராசியிலேயே ராகு சஞ்சரிக்கப் போவது அவ்வளவு நல்லதல்ல. சூரியன் வீட்டில் ராகு சஞ்சரிக்கும் பொழுது, கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். சப்தம ஸ்தானத்திலும் கேது சஞ்சரிக்கின்றார்.

சர்ப்ப தோஷத்தின் பிடியில் இருக்கும் கிரக நிலை உங்களுக்கு வந்து சேருகிறது. எனவே, ராகு-கேது பெயர்ச்சியான இரண்டு மாதங்களுக்குள் முறையான சர்ப்ப பிரீதிகளை செய்து கொள்வதன் மூலம் முன்னேற்றத் தடைகளை அகற்றிக் கொள்ள முடியும்.
குடும்பத்திலும் குழப்பங்கள் ஏற்படலாம். மூன்றாம் நபரின் குறுக்கீட்டால் முக்கியப் பிரச்சினைகளுக்கு முடிவுஎடுக்க முடியாமல் திணறுவீர்கள். வளர்ச்சியும், தளர்ச்சியும் மாறி மாறி வரும். சேமிப்புகள் கரையலாம்.

சனியின் சஞ்சார நிலைகள்!

சனி பகவான் வருடத் தொடக்கத்திலேயே வக்ர இயக்கத்தில் தான் இருக்கிறார். 12.6.2015 முதல் துலாம் ராசியில் வக்ரமடைகிறார்.
30.7.2015-ல் வக்ர நிவர்த்தியாகிறார். பிறகு 5.9.2015-ல் விருச்சிக ராசியில் வக்ர நிவர்த்தியடைகிறார். பிறகு 26.3.2016-ல் மீண்டும் விருச்சிக ராசியில் சனி வக்ரமடைகிறார்.

இப்படி இந்த ஆண்டு முழுவதும் சனி வக்ர இயக்கத்தில் இருப்பதும், வக்ர நிவர்த்தியாவதும் மாறி மாறி நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. துலாத்தில் சனி இருக்கும் பொழுது சகோதர ஒற்றுமை பலப்படும். வழக்குகளில் வெற்றி ஏற்படும். உடன்பிறப்புகளால் நல்ல காரியம் இல்லத்தில் நடைபெறும்.

விருச்சிகத்தில் சனி வக்ரமடையும் பொழுது வீடு, இடம் வாங்கும் சூழ் நிலைகள் உருவாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைத்து வசதி வாய்ப்புகளை பெருக்கிக் கொள்வீர்கள். அதே நேரத்தில் சப்தமாதிபதி வக்ரம் பெறுவதால் வாழ்க்கைத் துணையோடு அனுசரித்துச் செல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகும்.
கல்யாண வாய்ப்புகள் கைநழுவிச் செல்லலாம். சனி கவசம் பாடி சனி பகவானை வழிபடுவது நல்லது. ஆதித்தனும், சனியும் அடுத்தடுத்து இருக்கும் ஆலயங்களுக்குச் சென்று வழிபடுவது சிறப்பானதாகும்.

குருவின் வக்ர இயக்கம்!

குரு 20.12.2015-ல் கன்னி ராசியில் அதிசாரம் பெறுகிறார். 7.2.2016-ல் சிம்ம ராசியில் வக்ரம் பெறுகிறார். இதன் விளைவாக பண வரவு திருப்தி தரும். தொழிலில் ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்யும் வாய்ப்பு கிட்டும். குழந்தைகளின் நலன் கருதி எடுத்த முயற்சிகளில் அனுகூலம் ஏற்படும். அவர்களின் அன்னிய தேசப் பயணங்கள் எண்ணியபடி முடிவடையும். குரு வழிபாடு குதூகலம் வழங்கும்.

வருடம் முழுவதும் வசந்தம் வர வழிபாடு!


ராசிநாதன் சூரியனை பலப்படுத்த ஞாயிற்றுக்கிழமை அன்று சூரிய வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். ராகு- கேது பிரீதியும் மனக்கவலையை மாற்றும். சனிக்கிழமை அனுமனுக்கு விளக்கேற்றி வழிபடுவது நல்லது. திசாபுத்திக்கேற்ற தெய்வ வழிபாடு சிறப்பான வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும்.

மங்கையருக்கான மகத்தான பலன்கள்!

சிம்ம ராசியில் பிறந்த பெண்களே, ஆண்டின் தொடக்கத்தில் அடுக்கடுக்காக நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரும். குருச்சந்திர யோகத்தால் குழப்பங்களில் இருந்து விடுபடுவீர்கள். சனியின் வக்ர இயக்கம் சாதகமாக இருப்பதால் வெற்றிச் செய்திகள் வீடு தேடி வரும். குருப் பெயர்ச்சிக்குப் பிறகு விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேருவர். கணவன்-மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும்.

ஆடை, ஆபரண சேர்க்கை அதிகரிக்கும். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி தீட்டிய திட்டங்கள் வெற்றி பெறும். ஆரோக்கியத் தொல்லை அகலும்.

^