அதிமுகவுக்கு ஒரு ஓட்டு போட்டாலும், அது மோடிக்குத்தான் செல்லும் - சந்திரபாபு நாயுடு !!!

அதிமுகவுக்கு ஒரு ஓட்டு போட்டாலும் அது மோடிக்குத்தான் செல்லும் என்றும், தமிழகத்தில் மோடியின் ஆட்சிதான் நடக்கிறது என்று தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.சென்னை வந்துள்ள சந்திரபாபு நாயுடு, அண்ணா அறிவாலயத்தில் திமுக நிர்வாகிகள் ஆர்.எஸ்.பாரதி, மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பார்கள் தயாநிதி மாறன், தமிழச்சி தங்கபாண்டியன், கலாநிதி ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தெலுங்கு, தமிழ் மக்கள் உறவு அண்ணன், தம்பி உறவு போன்றது. தமிழகத்தில் அதிமுக ஆட்சி நடக்கவில்லை என்றும், மோடியின் ஆட்சிதான் நடக்கிறது.அதிமுகவுக்கு ஒரு ஓட்டு போட்டாலும் அது மோடிக்குத்தான் செல்லும். தமிழக விவசாயிகள் டெல்லியில் போராடியது போது மோடி, அவர்களை பிரதமர் மோடி கண்டுகொண்டாரா? தமிழக விவசாயிகளின் போராட்டத்தை அவர் கண்டுகொள்ளவில்லை.திமுக தலைவர் கருணாநிதி சிறந்த தலைவர். அவரது மறைவுக்குப் பிறகு, அவர் மகன் மு.க.ஸ்டாலினை முதல்வராக பார்க்க, மக்கள் விரும்புகிறார்கள். ஆளும் அரசின் காரணமாக. ஜனநாயகம் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. தமிழக வாக்களர்களுக்கு வேண்டுகோள் கொடுக்கவே தற்போது நான் சென்னை வந்துள்ளேன். என தெரிவித்தார். 

^