Posted Date : 15-Apr-2019
Last updated : 15-Apr-2019
8 வழிச்சாலை வந்து தீரும்.. நிதின்கட்கரி.. .
8 வழி சாலைக்கு எதிராக உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி விட்டது. அதனால், ஆக்கிரமிக்கபட்ட விவசாய நிலங்கள், சம்பந்தபட்ட விவசாயிகளிடம் ஒப்படைக்கபடும் என அறிவிக்கபட்டதும், விவசாயிகள் சந்தோஷத்தில் இருந்தார்கள். இந்த சூழ்நிலையில் ஆளும் தரப்பினர், தீர்ப்பை பற்றி எந்த விமர்சனமும் செய்யாமல் இருந்தார்கள். தேர்தல் சமயத்தில் பேசினால், விவசாயிகளின் வாக்கு சிதறி விடும் என்கிற பயம் இருந்தது ஆனால், சேலம் பிரச்சார கூட்டத்திற்கு வந்த மத்திய அமைச்சர் கட்கரி, கண்டிபாக 8 வழிச்சாலை அமைக்கபடும் என பேசி விட்டார். அந்த மேடையில் முதல்வர் எடப்பாடி, ராமதாஸ் எல்லாம் இருக்க, இப்படி கட்கரி பேசியதை ஷாக்காக கேட்டு கொண்டு இருந்தார்கள் வேறயென்ன செய்ய முடியும்?