சீனா காட்டுத் தீயை அணைக்கச் சென்ற 24 தீயணைப்பு வீரர்கள் பலி

சீனாவின் தென்மேற்கு திசையில் உள்ள 3800 மீட்டர் நிலப்பரப்பு கொண்ட வனப்பகுதியில் கடந்த சனிக்கிழமை திடீரென காட்டுத்தீ பரவியது. இதையடுத்து தகவல் அறிந்த தீயணைப்புப்படையினர், 100 வீரர்கள் கொண்ட குழுவினருடன் அப்பகுதிக்கு விரைந்து சென்று தீயை அணைக்கு முயற்சியில் ஈடுபடுத்தப்பட்டனர். ஆனால் பல மணி நேரம் போராடியும் தீயை அணைக்க முடியாமல் தவித்தனர். இந்நிலையில் நேற்று மதியம் வரை அதிகாரிகள், பணியில் ஈடுபட்டிருந்த 30 தீயணைப்பு வீரர்களை தொடர்பு கொண்டு, அங்குள்ள நிலவரத்தை கேட்டறிந்துள்ளனர். அதன் பின்னர் காற்று வீசும் திசையில் சிறிது மாற்றம் ஏற்படவே, தீ மிகவும் வேகமாக அனைத்து இடங்களிலும் பரவியது. இதனால் நேற்று அவர்களை தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் இன்று 2 தீயணைப்பு வீரர்களிடம் அதிகாரிகள் தொடர்பு கொண்டபோது, காற்று வீசும் திசையில் மாற்றம் ஏற்பட்டதால் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த 24 வீரர்கள் தீயில் சிக்கி பலியானதாக தெரிவித்துள்ளனர்.

^