​பணம் வரும்.. அதை ஒழுங்கா கொடுங்கப்பா? முதல்வர் பேச்சு..!

 

அதிமுக வேட்பாளர்கள் அறிவித்த கையோடு, மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தி இருக்கிறார்கள் அதில் ஒபிஎஸ் பேசும் போது, அம்மா இறந்த பிறகு சந்திக்கும் தேர்தல். ஆர்.கே.நகர் போல் இந்த தேர்தலையும் கோட்டை விட்டு விட கூடாது. மிக பெரிய கூட்டணியை அமைத்து இருக்கிறோம். அதிமுக நிற்கும் தொகுதிகளில் தோற்கவே கூடாது நாம் ஒற்றுமையாக இருந்து செயல்பட வேண்டிய நேரம் வந்து விட்டது என தெரிவித்தார் அதன் பின்னர் பேசிய எடப்பாடி, வேட்பாளர் அறிவிச்சதும் பணம் எப்ப வரும்? என கேட்கிறார்கள் அம்மா உயிருடன் இருந்த வரைக்கும், கொடுக்கிற பணம் கடைசி தொண்டன் வரைக்கும் போய் சேரும். இது தான் அம்மாவின் வெற்றி ரகசியம் அதே போல் கொடுக்கிற பணத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்த்தாலே அதிமுக வெற்றி பெற்று விடும் என்பதை மறந்து விடாதீர்கள்? என பேசினார் ஆனால், இந்த முறை கொடுக்கிற பணத்தை அப்படியே அழுக்கி விடுவார்கள் நிர்வாகிகள் என்கிற பயத்தில் இருக்கிறார்கள் ஒபிஎஸ், இபிஎஸ் என்பதை வெளிகாட்டி இருக்கிறது எடப்பாடியின் பேச்சு...

^