பிஹார் பாட்னா சாகிப் தொகுதியில் சத்ருகன் வெளியே.. ரவிசங்கர் உள்ளே?

பிஹார் பாட்னா சாகிப் தொகுதியில் தற்போதைய பாஜக எம்.பி. சத்ருகன் சின்ஹாவுக்கு பதில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தை களமிறக்க பாஜக மேலிடம் திட்டமிட்டுள்ளது.

பிஹார் பாட்னா சாகிப் தொகுதி எம்.பி. சத்ருகன் சின்கா, பாஜக.வுக்கு எதிராகவும் கட்சி தலைவர்களுக்கு எதிராகவும் தொடர்ந்து கருத்துகளைத் தெரிவித்து வருகிறார். இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் அந்தத் தொகுதியில் சின்ஹாவை கழற்றிவிட்டு, மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அல்லது பாஜக மாநிலங்களவை எம்.பி. ஆர்.கே.சின்ஹாவை களமிறக்கலாம் என்று பாஜக தலைவர்கள் ஆலோசித்துள்ளனர்.பாஜக மத்திய தேரதல் குழுக் கூட்டம் கடந்த சனிக்கிழமை இரவு வரை நீடித்தது. இதில் பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா, பிஹார் துணை முதல்வர் சுஷில் மோடி, பிஹார் பாஜக தலைவர் நித்தியானந்த் ராய் உட்பட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். அப்போது பாட்னா சாகிப் தொகுதியில் சத்ருகன் சின்ஹாவுக்குப் பதில் வேறு ஒருவரை களமிறக்குவது தீவிரமாக ஆலோசிக்கப்பட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

^