அமைச்சர் அன்பழகன் .. அன்புமணி .....தொடரும் லடாய் ..! .

 .

தர்மபுரியில் மொரப்பூர் ரயில்பாதை திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இதில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கலந்து கொண்டார். அவருக்கு ஆளுயுர மாலை அணிவிக்கபட்டது. அந்த மாலையை பிடிக்க முடியாமல் தடுமாறிய மத்திய அமைச்சர், அருகில் இருந்த அன்புமணியையும், அமைச்சர் தங்கமணியையும் பிடிக்க சொல்லி, அப்படியே மாலைக்குள் கொண்டு வந்து விட்டார். அமைச்சர் கே.பி.அன்பழகனையும் மாலைக்குள் கொண்டு வர அன்புமணி முயற்சி செய்தார். அவர் இடவசதி இல்லை? என வர மறுத்து விட்டார் அத்துடன் திட்டம் தொடர்பான பட்டனை 3 பேரும் அழுத்தினார்கள். அப்போதும் அன்புமணி, அமைச்சர் அன்பழகனை அழைத்தார். அப்போதும் அன்பழகன் வர மறுத்து விட்டார் அம்மாவை கொஞ்சநஞ்சமா திட்டினாங்க? அவர்களுடன் நின்று போட்டோ எடுத்து கொண்டால் கூட அதிமுக தொண்டன் நம்மை மதிக்க மாட்டான் என அமைச்சர் அன்பழகன் தன் சகாக்களுடன் விழா முடிந்ததும் தெரிவித்து இருக்கிறார்

^