கிரண்பேடி ட்விட்டால். அதிரும் புதுச்சேரி. முதல்வருக்கு மக்களின் ஆதரவு அதிகரிக்கிறது.

 . . .முதல்வர் நாராயணசாமியின் தர்ணா போராட்டத்தை கிண்டல் செய்யும் விதமாக கிரண்பேடி டிவிட் ஒன்று செய்துள்ளார் தர்ணாவும் ஒரு வகை யோகா தான். எந்த சூழ்நிலையில் , எதற்காக அமர்ந்து இருக்கிறீர்கள்? என்ன ஆசனம் செய்கிறீர்கள்? என்ன சப்தம் எழுப்புகிறீர்கள்? என்பதை பொறுத்தது என டிவிட் செய்து இருக்கிறார் இந்த டவிட் கீழே இரண்டு காக்கை படத்தை பதிவிட்டு இருக்கிறார். இது காக்கா ஆசனம் என தெரிவித்து பதிவிட்டு இருக்கிறார் இது மாநில முதல்வரை கிண்டல் செய்யும் விதமாக இருப்பதால், புதுச்சேரி மக்கள் அதிருப்தி அடைந்து இருக்கிறார்கள் இந்த ட்விட் மக்களிடம் பரவி, கிரண்பேடியை உடனடியாக புதுச்சேரியை விட்டு போக வேண்டும் என மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கருப்பு கொடி போராட்டம் வலு பெற்று இருக்கிறது கிரண்பேடியால் புதுச்சேரி பாஜகவினர் அதிருப்தி அடைந்து விட்டார்கள். இனி புதுச்சேரியில் இருக்கிற கொஞ்ச ஒட்டும் கிரண்பேடி இந்த செய்கையால் இழந்து விட்டோம்? என புலம்ப ஆரம்பித்து விட்டார்கள் அத்துடன் பாஜகவுடன் கூட்டணி வைக்க இருந்த என்.ஆர்.காங்கிரஸ் கட்சியும், தற்போது பாஜகவுடன் கூட்டணி அமைக்க தயக்கம் காட்டி வரும் சூழ்நிலை தான் எழுந்து இருக்கிறது..

^