திமுக கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் பிரச்சனை! , , ,

, ,தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் 26 வது மாநில மாநாடு சேலம் தமிழ் சங்க கட்டிடத்தில் நடை பெற்றது அதில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் முத்தரசன் , கம்யூனிஸ்டுகளை உண்டியல் குலுக்கிகள் என கிண்டல் செய்கிறார்கள். நாங்கள் உண்டியல் குலுக்கி தான் கட்சியை வளர்த்தோம். அதனால், எங்கள் வீட்டிற்கு வருமான வரித்துறையினர் ரெய்டு வருவதில்லை? என தெரிவித்தவர் நாங்கள் திமுக கூட்டணியில் தான் இருக்கிறோம். இன்னும் தொகுதி பங்கீடு குறித்து பேச்சு வார்த்தை நடை பெறவில்லை? கட்சியின் தலைவர்கள் தொகுதி பங்கீடு குறித்து பேச்சு வார்த்தை நடத்தி முடிவு எடுப்பார்கள். அதற்காக தன்மானத்தை விட்டு கொடுக்க மாட்டோம் என தெரிவித்து இருக்கிறார். இந்த பேச்சு தற்போது திமுக கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் பிரச்சனை இருப்பதை வெளிப்படுத்தி இருக்கிறது என தெரிகிறது திமுக கூட்டணியில் சிபிஎம்க்கு கட்சிக்கு 2 சீட்டும், சிபிஐக்கு 1 சீட்டும் கொடுக்க இருப்பதாக தெரிகிறது. கம்யூனிஸ்ட் கட்சிகளை பிரித்து பார்க்கிறார்கள். இரு கட்சிகளையும் சமமாக பார்க்க வேண்டும். தொகுதி ஒதுக்கீட்டில் இரு கட்சிகளும் சமமாக வாய்ப்பு கொடுக்க வேண்டும் என சிபிஐ தலைவர்கள் திமுகவிடம் வலியுறுத்தி வருவதாக தெரிகிறது.

^