கோமாவில் இருந்த பெண்ணை கர்ப்பமாக்கியது ஒரு நர்ஸா

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் 29 வயதான பெண் ஒருவர் கடந்த 14 ஆண்டுகளாக கோமா நிலையில் சிகிச்சைப்பெற்று வந்தார்.இந்த நிலையில் கடந்த மாதம் 29ம் தேதி அந்த கோமாவில் இருந்த பெண் கருத்தரித்து பெண் குழந்தையை பெற்றெடுத்தார் யாரும் எதிர்பாராத வகையில் அந்த பெண் கர்ப்பம் தரித்தார்.கடந்த மாதம் 29-ந் தேதி அந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. 14 ஆண்டுகளாக கோமாவில் இருந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமையை செய்தது யார் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கினர்.உண்மையை கண்டறிவதற்காக மருத்துவமனையில் பணியாற்றும் அனைத்து ஆண்களும் டி.என்.ஏ. பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.இதில் அந்த மருத்துவமனையில் ஆண் நர்சாக பணியாற்றும் நாதன் சுதர்லாந்த் என்பவர் தான், கோமாவில் இருந்த பெண்ணை கற்பழித்து கர்ப்பமாக்கினார் என்பது டி.என்.ஏ. பரிசோதனை மூலம் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்

^