. . .கொடநாடு கொலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டிய சயன், மனோஜ் இருவரையும் சைபர் கிரைம் போலீஸ் அவதூறு வழக்கு பதிவு செய்து, டெல்லியில் கைது செய்து அழைத்து வந்து விசாரணை நடத்துகிறார்கள் தெகல்கா ஆசிரியரும், கேமிராமேனும் அவர்களை சந்தித்து பேசி இருக்கிறார்கள். இந்த வழக்கை இன்ஸ்பெக்டர் லெவலில் விசாரிக்க வேண்டியதை ஜாயிண்ட் கமிஷனர் அன்பு மற்றும் டெபுடி கமிஷனர் செந்தில் ஆகியோர் விசாரணை நடத்தி கொண்டு இருக்கிறார்கள் கைது செய்யபட்ட சயன், மனோஜ் இருவரிடமும், இந்த கொலைக்கும், முதல்வர் எடப்பாடிக்கும் எந்த சம்பந்தமில்லை? மற்றவர்கள் சொன்னப்படி தான் சொன்னேன் என்று சொல்ல வைக்க வேண்டும் என்பது தான் . அவர்கள் மறுத்து விட்டார்கள். வெற்று பேப்பரில் கையெழுத்து போட சொன்னதற்கு, கைது செய்யபட்ட இருவரும் மறுத்து விட்டார்கள் விசாரணை நடத்தி கொண்டிருந்த ஜாயிண்ட் கமிஷனர் அன்புக்கு அடிக்கடி போன் வந்து இருக்கிறது இன்னும் ஒத்து கொள்ளவில்லை சார்? என்கிற பதில்லை தான் சொல்லி இருக்கிறார் விசாரணை நடந்து கொண்டு இருக்கிறது..
Posted Date : 14-Jan-2019
Last updated : 08-Apr-2019
கொலைக்கும் எடப்பாடிக்கும் சம்பந்தமில்லை? குற்றவாளிகள் ஒப்பு கொள்ளவில்லை? .