இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 9 பேருக்கு ஜனவரி 17 வரை நீதிமன்ற காவல்

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 9 பேரை ஜனவரி 17 வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இலங்கை அருகே மீன்பிடித்து கொண்டிருந்த புதுக்கோட்டையை சேர்ந்த மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்து சென்றது.எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட அவர்கள், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.அவர்கள் 9 பேரையும் ஜனவரி 17ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து 9 பேரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.இதுபோல நேற்று இரவு ராமேஸ்வரத்தை சேர்ந்த 11 மீனவர்கள்எல்லை தாண்டி பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்தது குறிப்பிடத்தக்கது

^