விஜயகாந்த் இல்லாமல் யாரும் தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாது என விஜயகாந்த் மகன் விஜய் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.தருமபுரியில் தேமுதிக சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜயகாந்த் மகன் விஜய் பிரபாகரன், மக்களுக்கு பொங்கல் பரிசுகளை வழங்கினார்.அதன்பின் பேசிய அவர், கேப்டன் விஜயகாந்த் குறித்து பல தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பேசப்படுகிறது.பல தவறான தகவல்களும் பகிரப்பட்டு வருகின்றன. அதை யாரும் நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.அமெரிக்காவில் சிங்கம் போன்று கெத்தாக விஜயகாந்த் இருப்பதாக கூறிய அவர், நீங்கள் ஆதரவு கொடுத்தால் அவர் மிக விரைவில் நலமடைந்து வருவார் என்றும் தெரிவித்தார்.எப்படி 2001ல் விஜயகாந்தை நோக்கி எல்லா கட்சிகளும் வந்ததோ அதே போன்று தான் வரும் தேர்தலிலும் கோயம்பேட்டை நோக்கி அனைத்து கட்சிகளும் வரும் என்றார்.மேலும் தமிழகத்தில் விஜயகாந்த் இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்றார்.
அதிகம் படித்தவை
- விலை போன திருச்சி டிராபிக் போலீஸ், பாதிக்கபடும் பொதுமக்கள்
- 9,175 நெல் மூட்டைகள் அபேஸ்.. நாடகமாடிய ஐ.டி.பி.ஐ வங்கி.. நெத்தியடி கொடுத்த விவசாயிகள்..
- ஜெயலலிதாவை பாராட்ட வேண்டும்” - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
- கடமை தவறாத காக்கி...! தெப்பக்குளத்தில் பம்மிய திருடன்..! லீவிலும் ஒரு சேஸிங்..! நீச்சலில் சென்று மடக்கிய மக்கள்..!
- கோவையில் பிரதமர் மோடி பேரணிக்கு நீதிபதி அனுமதி