சர்க்காருக்கு பிறகு மீண்டும் விஜய் படத்தில் யோகிபாபு

சர்கார் திரைப்படத்திற்கு பிறகு அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளார். விஜய் உடன் நயன்தாரா மற்றும் நடிகர் கதிர் இணைந்து நடிக்க இருப்பது உறுதியாகியுள்ளது. விளையாட்டு துறையில் நடக்கும் ஊழல்கள், சாதி ரீதியிலான பாரபட்சம் போன்றவைகளை மையப்படுத்தி மையப்படுத்தி உருவாகும் இந்த படத்தில், தற்போது யோகி பாபுவும் இணைந்துள்ளார். இதற்க்கான அதிகாரபூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு முத்துராஜ் கலைப் பணிகளை மேற்கொள்கிறார். படப்பிடிப்பு வருகிற 20ம் தேதி தொடங்கவிருக்கிறது.

^