ஒபிஎஸ் தம்பி நீக்கம்! ஆதாரம் சிக்கியது..!

 , ,

மதுரை மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் தலைவராக ஒபிஎஸ்சின் தம்பி ராஜா தலைவரானார் அவரை எதிர்த்து போட்டியிட்ட துளசி என்பவர், ஒபிஎஸ்சின் தம்பி ராஜா குறுக்கு வழியில் தலைவராகி இருக்கிறார். அதற்கான ஆதாரங்களை அனுப்பி இருக்கிறேன் அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை? என்றால் , உடனடியாக இந்த ஆதாரங்களை திமுக தலைமைக்கு அனுப்பி விடுவேன் என முதல்வரின் தனி பிரிவுக்கு அனுப்பி விட்டார் தனி பிரிவு அதிகாரியான ஜெயஸ்ரீ இந்த விவகாரத்தை உடனடியாக முதலவர் எடப்பாடி கவனத்திற்கு கொண்டு சென்றார் ஒபிஎஸ்சிடம் ஆதாரத்தை காட்டி டென்ஷனாய் பேசி இருக்கிறார் முதல்வர் ஊழல் புகார் என்பதால் உடனடியாக கட்சி நடவடிக்கை எடுத்தாக வேண்டும். அத்துடன் அவரை கட்சியை விட்டு நீக்க வேண்டும் என கத்தி இருக்கிறார் பதவியை ராஜினாமா செய்ய வைத்து விடலாம்? ஏன் கட்சியை விட்டு தூக்க வேண்டும் வேண்டும் என்று ஒபிஎஸ் கேட்டு கொண்டு இருக்கும் போதே, அறிக்கை தயாராகி வந்தது அதில் முதல்வர் எடப்பாடியும், ஒபிஎஸ்சும் கையெழுத்து போட்டு ராஜாவை கட்சி பதவியில் இருந்து நீக்கி விட்டார்கள் 8 டைரக்டர்கள் சேர்ந்து தான் தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும். இதில் 3 பேர் தினகரன் அணியை சேர்ந்தவர்கள். அவர்கள் வீட்டிற்கு நேரிடையாக ராஜா சென்று பேசி இருக்கிறார் அதன் பிறகு தினகரனிடமும் ராஜா பேசி இருக்கிறார் இது உளவுதுறைக்கு தெரிந்து போனதால் தான் இந்த அதிரடி நடவடிக்கை என்கிறார்கள்

^