​தங்கதமிழ்செல்வனிடம் தொடர்ந்து அதிமுகவினர் பேச்சு வார்த்தை..

 .

அம்மா மக்கள் முன்னேற கழகத்தில் இருந்து செந்தில் பாலாஜி திமுகவிற்கு சென்ற பிறகு, தினகரன் தடுமாற்றத்தில் தான் இருக்கிறார். அவசரமாக சிலரை அழைத்து போய் சசிகலாவை சிறையில் சந்தித்து பேசி வந்து இருக்கிறார்கள் திமுகவில் சபரீசன் திட்டம் போட்டு எதிர் டீம்மில் இருப்பவர்களை தூக்கி கொண்டு இருக்கிறார். எனவே நாமும் சும்மா இருக்க கூடாது என அதிமுகவும் களத்தில் இறங்கி விட்டது முக்கியமான அமைச்சர் மூலமாக தங்க தமிழ்செல்வனிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள் தங்க தமிழ்செல்வன்க்கு தேனி மாவட்டத்தில் செல்வாக்கு இருக்கிறது. அவர் எப்போது தேர்தலில் நின்றாலும் அவர் தான் வெற்றி பெறுவார் என்பது தெரிந்து அவரை அதிமுகவிற்கு கொண்டு வர பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள் அதே போல் அமமுகவில் இருக்கும் கதிர்காமுவும் அதிமுக பக்கம் போய் விடுவார் என்கிற பேச்சு பலமாக அடிப்படுகிறது

^