​திமுகவில் இணைய மாட்டேன்.......... நத்தம் விஸ்வநாதன்

2011 -  16 அதிமுக ஆட்சி காலத்தில் மின்சார துறை அமைச்சராக இருந்தவர் நத்தம் விஸ்வநாதன் அதன் பிறகு 2016ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதியில் போட்டியிட்ட நத்தம் விஸ்வநாதன் தோல்வி அடைந்தார் அதன் பிறகு திண்டுக்கல் சீனிவாசனுக்கு அமைச்சர் பதவி கிடைத்தது ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக இரண்டாக பிரிந்த போது, ஒபிஎஸ் அணியில் தன்னை இணைந்து கொண்டார் நத்தம் விஸ்வநாதன் இபிஎஸ், ஒபிஎஸ் இணைந்த பிறகு, நத்தம் விஸ்வநாதனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கபடவில்லை அதனால், அதிருப்தியில் இருந்தார் நத்தம் விஸ்வநாதன் இந்த சூழ்நிலையில், செந்தில் பாலாஜி அமமுக இருந்து திமுகவில் இணைந்ததும், தன்னை அதிருப்தியில் இருப்பவர்கள் திமுகவில் விரைவில் இணைவார் என தெரிவித்தார் அடுத்து நத்தம் விஸ்வநாதன் தான் திமுகவில் இணைய போகிறார் என பரவலாக பேசப்பட்டது இந்த சூழ்நிலையில் நத்தம் விஸ்வநாதன் இதை மறுத்து அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.

^