திமுக கூட்டணியில் ஈஸ்வரன்..! .

 . 

கொங்கு மண்டலம் ஜெயலலிதா உயிருடன் இருந்த போது அதிமுகவிற்கு சாதகமாக இருந்தது. அங்கே தான் 10 எம்எ, 80 எம்எல்ஏகள் அதிமுகவிற்கு கிடைத்து இருக்கிறார்கள். அதனால் தான் அதிமுக ஆட்சி அமைக்க முடிந்தது. இதற்கு காரணம் திமுகவினர் கடந்த சட்டமன்ற தேர்தலில் அலட்சியமாக இருந்தது தான் என ஸ்டாலின் கருதுகிறார் தற்போது அமைச்சரவையில் முக்கிய பொறுப்பில் இருக்கும் அமைச்சர்கள் அனைவரும் கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர்கள் என்பதால், செலவழித்தவது மீண்டும் எம்எல்ஏ பதவியை பிடிக்க வேண்டும் என கங்கணம் கட்டி கொண்டு இருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவர் ஈஸ்வரனை திமுக கூட்டணியில் சேர்க்க ஸ்டாலின் திட்டமிட்டு இருக்கிறார். அதன் மூலம் அதிமுக அமைச்சர்களுக்கு செக் வைக்க முடியும் என நினைக்கிறார்

^