சந்திர சேகர ராவ் ஆட்சியமைக்க பாஜக ஆதரவு ?

தெலங்கானாவில் தொங்கு சட்டசபை ஏற்பட்டால் சந்திரசேகர ராவ் ஆட்சி அமைக்க ஆதரவு கொடுப்போம் என பாஜக அறிவித்துள்ளது. மிசோரம், ராஜஸ்தான், தெலங்கானா சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவைத்தேர்தல்களுக்கான வாக்குப்பதிவு அண்மையில் முடிவடைந்தது. இந்தத் தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் டிசம்பர் 11-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் வெளியிட்டுள்ள தேர்தல் கருத்துக்கணிப்புகளில், தெலங்கானாவில் சந்திரசேகர ராவின் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாஜக மாநில தலைவர் கே. லட்சுமண் கூறியதாவது:- "காங்கிரஸ், எம்.ஐ.எம். ஆகிய காட்சிகள்தான் தங்களுக்கு எதிர் நிலைப்பாட்டில் உள்ள கட்சிகள் என்றும், தெலங்கானாவில் தொங்கு சட்டசபை ஏற்பட்டால் சந்திரசேகர ராவ் ஆட்சி அமைக்க ஆதரவு கொடுப்போம் என்றும் கூறியுள்ளார்

^