சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை அமல்படுத்தும் முயற்சியில் கேரள அரசு இறங்கியுள்ளது.இதற்கு பலத்த எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. கேரளா முழுவதிலும் பல்வேறு இடங்களில் ஐய்யப்ப பக்தர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தை பாஜகவும், இந்து அமைப்புகளும் போராட்டத்தை தீவிரப்படுத்தியதை தொடர்ந்து, கோவில் பகுதியில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், கேரளா பாஜகவினர் இன்று முதலமைச்சர் பினராயி விஜயன் வீட்டை முற்றுகையிட பேரணியாக சென்றனர். அப்போது போராட்டக்காரர்களை போலீசார் தடுப்பு அமைத்து தடுத்து நிறுத்தினர். ஆனாலும் பாஜகவினர் தடுப்பை உடைத்து உள்ளே செல்ல முயற்சி மேற்கொண்டனர். இதையடுத்து, அங்கு கூடியிருந்த போராட்டக்காரர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் பாஜகவினரை விரட்டினர். இச்சம்பவத்தினால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதிகம் படித்தவை
- காங்கிரஸின் நீட் ரத்து ரகசியம்..ப.சிதம்பரத்தால் அம்பலம்..! உச்சநீதிமன்ற தீர்ப்புன்னா மாநிலம் எப்படி முடிவெடுக்கும் ?
- நெல்லை எக்ஸ்பிரஸில் கொண்டு செல்லப்பட்ட ரூ.3.99 கோடி பணம் பறிமுதல்.. நயினார் நாகேந்திரனின் தேர்தல் செலவுக்கு கொண்டு செல்லப்பட்டதாகத் தகவல்..!
- திருவள்ளூர் மாவட்ட திமுக நிர்வாகி மீது பணப் பட்டுவாடா புகார்
- வெற்றிக்கு வியூகம் வகுக்க போனா.. வெளுக்குறாங்க.. உன் ஊருக்கு போ.. அமைச்சரை விரட்டிய திமுகவினர்..!
- "தன்னை எதிர்த்து நிற்கும் அதிமுக வேட்பாளர் தூத்துக்குடியைச் சேர்ந்தவர் அல்ல"