Posted Date : 28-Nov-2018
Last updated : 28-Nov-2018
சென்னையில் தொடர் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இருவர் கைது!
சென்னையில் போலீசாரிடமே செல்போன் பறிக்க முயன்ற இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மயிலாப்பூரில் நள்ளிரவு இருசக்கர வாகனத்தில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசாரை பின்தொடர்ந்து சென்ற இருவர், அவர்களுடைய செல்போனை பறிக்க முயன்றனர். இதனால், அதிர்ச்சியடைந்த போலீசார், அவர்கள் இருவரையும் துரத்தி மடக்கிப் பிடித்தனர். இதன்பின் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரிக்கையில் கொடுங்கையூரைச் சேர்ந்த பாலாஜி, ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்த பாஷித் இப்ராஹிம் ஆகிய இருவரும் தொடர் செல்போன் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். பின்னர் அவர்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அதிகம் படித்தவை
- விலை போன திருச்சி டிராபிக் போலீஸ், பாதிக்கபடும் பொதுமக்கள்
- 9,175 நெல் மூட்டைகள் அபேஸ்.. நாடகமாடிய ஐ.டி.பி.ஐ வங்கி.. நெத்தியடி கொடுத்த விவசாயிகள்..
- ஜெயலலிதாவை பாராட்ட வேண்டும்” - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
- கடமை தவறாத காக்கி...! தெப்பக்குளத்தில் பம்மிய திருடன்..! லீவிலும் ஒரு சேஸிங்..! நீச்சலில் சென்று மடக்கிய மக்கள்..!
- கோவையில் பிரதமர் மோடி பேரணிக்கு நீதிபதி அனுமதி