செயற்கை நுன்னறிவு தொழில்நுட்பம் மூலம் செய்தி வாசிக்கும் மாயப் பிம்பம்!

செயற்கை நுன்னறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மாயப் பிம்பத்தின் மூலம் செய்தி வாசிக்கும் முறையை உலகில் முதன்முறையாக சீனா அறிமுகப்படுத்தியுள்ளது. அனைத்து துறைகளிலும் மனிதர்களுக்கு மாற்றாக பணியாற்றுவதற்கு ரோபோட்களை உருவாக்கியுள்ள சீனாவில் தற்போது சர்வதேச இணைய கருத்தரங்கம் நடைபெற்று வருகிறது.இந்த கருத்தரங்கில் செயற்கை நுன்னறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மாயப் பிம்பத்தின் மூலம் செய்தி வாசிக்கும் முறையை உலகில் முதன்முறையாக சீனா அறிமுகப்படுத்தியுள்ளது.சீனாவின் பிரபல செய்தி நிறுவனமான சின்ஹுவா தொலக்காட்சி நிலையத்தில் செயற்கை நுன்னறிவு தொழில்நுட்பத்துடன் பணியமர்த்தப்பட்டுள்ள ‘ஹி’ எனப்படும் அந்த உயிரில்லாத செய்தி வாசிப்பாளர், ஆணின் முக அமைப்புடனும் குரலுடனும் காணப்படுகிறார். அச்சுவடிவில் எழுத்துக்களாக வரும் செய்திகளை குரல் வடிவில் வாசிக்கும் இந்த மாயப் பிம்பம் செயற்கை நுன்னறிவு தொழில்நுட்பத்தின் அடுத்தகட்ட சாதனையாக கருதப்படுகிறது.பின்னணியில் வெளியாகும் வீடியோ காட்சிகளை உள்வாங்கி, அதற்கேற்ப உயிருள்ள நபர்களைப் போலவே குரலில் ஏற்ற இறக்கத்துடனும், முகபாவத்துடனும் தேவைப்படும் நேரங்களில் அளவான கண்ணசைவுகளுடனும் செய்தி வாசிக்கும் இந்த ‘ஹி’யால் ஒருநாளின் 24 மணி நேரமும் ஆண்டின் அனைத்து நாட்களிலும் சோர்வின்றி செய்தி வாசிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.இதுதொடர்பான செய்திகள் வெளியானதும் இன்னும் சில ஆண்டுகளில் நமக்கெல்லாம் வேலை இல்லாமல் போய்விடும் என சில செய்தி வாசிப்பாளர்கள் டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

^