தோல்நோய்களுக்கு மருந்தாகும் தேள்கொடுக்கு

,காய்ச்சலை தணிக்க கூடியதும், சளி, இருமல் பிரச்னைகளுக்கு மருந்தாக அமைவதும், சொரி, சிரங்கு உள்ளிட்ட தோல் நோய்களை போக்க கூடியதும், நாள்பட்ட புண்களை ஆற்றும் தன்மை கொண்டதுமான தேள்கொடுக்கு இலையின் நன்மைகள் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் காணலாம். அற்புதமான மருத்துவ குணங்களை கொண்ட தேள்கொடுக்கு இலையானது உள், வெளி மருந்தாகி பயன்தருகிறது. தோல்நோய்களை குணப்படுத்தும். நுண்கிருமிகள், பூஞ்சை காளான்களை அழிக்கும். காய்ச்சலை தணிக்கும். குழந்தைகளுக்கு ஏற்படும் மாந்தத்தை போக்குகிறது. மாதவிலக்கு, வெள்ளைப்போக்கு பிரச்னையை சரிசெய்கிறது. தேள்கொடுக்கு இலைகளை கொண்டு புண்கள், சிராய்ப்பு காயங்களை குணப்படுத்தும் மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். தேள்கொடுக்கு இலை, தேங்காய் எண்ணெய், மஞ்சள். ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் எடுக்கவும். இதனுடன் தேள்கொடுக்கு இலை பசையை சேர்த்து தைலப்பதமாக காய்ச்சி மஞ்சள் சேர்க்கவும். இந்த தைலத்தை பூசிவர அரிப்பு, சொரி, சிரங்கு போன்றவற்றை குணமாகும். தேள்கொடுக்கு இலைகளை பயன்படுத்தி காய்ச்சலை குணப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: தேள்கொடுக்கு இலை, சீரகம், பனங்கற்கண்டு. ஒரு பாத்திரத்தில் நீர்விடவும். இதனுடன், அரைத்து வைத்திருக்கும் தேள்கொடுக்கு இலை பசையை சிறிய நெல்லிக்காய் அளவுக்கு சேர்க்கவும். சிறிது சீரகம், பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி காய்ச்சல் இருக்கும்போது காலை, மாலை என இருவேளை குடித்துவர வியர்வையை உண்டாக்கி காய்ச்சலை தணிக்கும். வண்டுக்கடி, பூச்சிக்கடி இருக்கும்போது இதை குடித்துவர வலி சரியாகும். பூச்சிக்கடி குணமாகும். வெள்ளைப்போக்கு பிரச்னை தீரும். நாள்பட்ட புண்களை ஆற்றும் அற்புத மருந்தாக இது விளங்குகிறது.

^